நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது. மும்பையின் கேங்ஸ்டர்கள் குறித்து படித்திருப்போம். கேள்விப்பட்டிருப்போம். படங்கள் வந்திருக்கின்றன. அவர்களுக்கு இணையாக, அவர்களே மதிக்கும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இவர்களுக்கு எப்படி துணையாக இருந்தனர், எதிரிகளாக மாறினார்கள் என்பது பற்றியான புத்தகம் இது.